12.10.2009

ஆயுள் தண்டனை



 

ஆயுள் தண்டனை  கூட சுகம் தான்.....
சிறைசாலை "அவள் இதயமாக"  இருந்தால்.....

Thanks to Cheeyaan..... 

11.27.2009

நிலைத்திருக்கும்...


 




முகம் பார்க்கும் போது மட்டும்
 வரும் நினைவுகள்...
முகவரி இல்லாமல் போய்விடும்....!!
இதயம் பார்த்து 
வரும் நினைவுகள்...

இறுதிவரை நிலைத்திருக்கும்....!!!
நீங்காத நினைவுகளுடன்
ivingobi 



11.09.2009

Love your family.....


Love your family.....



 
மழையில் நனைந்து  கொண்டே வீட்டிற்கு  வந்தேன்....
குடை கொண்டு போக வேண்டியது தானே என்றான் அண்ணன்....
எங்காவது ஒதுங்கி நிறவேண்டியது தானே என்றாள் அக்கா...
ஜலதோஷம் பிடித்து செலவு வைக்கப் போகிறாய் என்றார் அப்பா...
என் தலையை முந்தானையில் துடைத்துக் கொண்டே திட்டினாள் அம்மா....
திட்டியது என்னை அல்ல...
மழையை...
Love your family .....

11.07.2009

கலக்குறாங்க நம்ம காயு.....

நம்ம வலைத்தளப் பூக்களின் கலக்கல் ராணி காயு ....

my thoughts da machi....


என்ற பெயரில் நிறைய எழுதறாங்க.....
அட நிஜமாதான் நல்லா எழுதறாங்க......
நம்ப மாட்டிங்களே
நம்ம கல்கி ல கூட அவங்க ப்லோக் பத்தி நியூஸ் லாம் வந்திருக்கு....
அடடா இப்பவும் நம்பலியா இதோ பாருங்க




ஆமா காயு எவ்ளோ pay பண்ணுனிங்க....
சொன்னா
நானும் join பண்ணிக்குவேன் ல....

my hearty wishes for GAAYUU....


11.06.2009

உன் நிழல்...


உன் நிழல்...



கூட்டத்தில் எல்லாம் நீ போகாதே....
யார், யாரோ மிதிக்கின்றார்கள்
உன் நிழலை
{ என் உயிரை...}


i Got this from my friend
KUTTICHATHAAN.......

11.05.2009

பெண்களுக்கு ஒரு முக்கிய செய்தி



பெண்களுக்கு ஒரு முக்கிய செய்தி
Thanks to oodumnadhi...





இரவு மும்பை கேஸ் இரவு விடுதிக்கருகில் ஒரு இளம் பெண்ணை, அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கி இருக்கின்றனர்.பின்னர் அவளை வேறொரு இடத்தில் போட்டு விட்டுப் போய் விட்டார்கள்.

காவல் துறையினால் மீட்கப் பட்டு அவர்கள் விசாரித்த போது எந்தக் கொடுமைகளையும் அந்தப் பெண்ணினால் நினைவு கூர முடியவில்லை.மருத்துவ பரிசோதனைகளில்தான் அவள் பலமுறை அடுத்தடுத்துக் கற்பழிக்கப் பட்டிருக்கிறாள் என்பது தெரிய வந்தது. அதுமட்டுமல்ல அவளது ரத்தத்தில் ROHYPNOL என்ற மருந்து கலந்திருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

‘பகல் நேரக் கற்பழிப்பு மருந்து ‘ என்று கொடுமைக்காரர்களால் செல்லமாக அழைக்கப் படும் அந்த மருந்து இப்போது பரவலாகப் பார்ட்டிகளில் உபயோகிக்கப் படுகிறது.குடிபானங்களில் சுலபமாகக் கரைந்து விடும் அந்த மருந்து குடித்தவர்களின் நினைவுகளை மட்டும் அழிப்பதில்லை,அந்தப் பெண்கள் கருத்தரிப்பதையும் தடை செய்து விடுகிறது.

கற்பழிப்பின் முக்கிய தடயமான ,பலியான பெண்ணின் கர்ப்பத்திலிருந்து தப்பிக்க அந்தக் கயவர்கள் பயன்படுத்தும் மருந்து இது.

கொடுமை என்னவென்றால் அந்தப் பெண் தற்காலிகமாக அல்ல, இனி நிரந்தரமாகவே கருத்தரிக்க முடியாமல் செய்து விடுகிறது அந்த மருந்து.

பெண்கள் பார்ட்டிகளில் குளிர் பானங்களைக் குடிக்கும் முன்னர் எச்சரிக்கைகளைக் கடைப் பிடிக்க வேண்டுமெனக் காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

கொடுமை சூழ இந்த உலகத்தில்தான் நாம் பெண் குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அந்த கடவுள் தான் அருள் புரிய வேண்டும்.

அந்த மருந்தைப் பற்றிய முழு விபரங்களை அறிய விரும்புவோர் பார்க்க..

http://en.wikipedia.org/wiki/Rohypnol.










9.05.2009

வா என் தேவதையே...